டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இலங்கையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் சுட உத்தரவு

இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:12 am

DIN

இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக நேற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகினார். 

அவரது வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து தற்போது அவர், தனி ஹெலிகாப்டர் மூலம் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அதற்கேற்ப ஹெலிகாப்டரில் இருந்து ராஜபட்ச குடும்பத்தினர் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளியாகின.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பேருந்து உள்ளிட்ட அரசு வாகனங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் இல்லம் முன்பு இருந்த மக்கள் பேருந்தை கவிழ்த்து எரித்தனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

காவல் துறையினரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், ராணுவத்தை இலங்கை அரசு கட்டவிழ்த்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.