ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்

நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

News image

'குழந்தைகள்' என எழுதப்பட்ட திரையரங்கு மீது தாக்குதல்: 'இல்லவே இல்லை' என்கிறது ரஷிய படைகள்

Updated On :17 மார்ச் 2022, 12:32 pm


மரியுபோல்: ரஷிய படைகளின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மரியுபோலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட கோர தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

மரியுபோல் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், இந்த திரையரங்கு மீது புதன்கிழமை ரஷிய படைகள் கோரத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Story image

தி மேக்ஸர் செயற்கைக்கோள் திங்கள்கிழமை எடுத்த புகைப்படத்தில், இந்த திரையரங்கு கட்டடத்தின் முன்னும் பின்னும், மிகப்பெரிய வெள்ளை எழுத்துக்களால் ரஷிய மொழியில் குழந்தைகள் என்று எழுதப்பட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரம்தான், மற்றப் பகுதிகளை விட ரஷிய படையெடுப்பால் உருகுலைந்து போயிருப்பதாகவும், ஏவுகணை மற்றும் குண்டு வீச்சுகளால் இதுவரை 2,300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரினால், ஒரு பக்கம் உயிராபத்துடன், குடிநீர், உணவு மருத்துவ வசதி பெற கடுமையான போராடி வருகிறார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலை ரஷிய படைகள் நடத்தவில்லை என்றும், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.