ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சீனாவில் மீண்டும் உருவாகிறதா கரோனா அலை?

சீனாவில் செவ்வாயன்று, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாளை விடவும் இரண்டு மடங்கு கூடுதலாக பதிவாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

சீனாவில் மீண்டும் உருவாகிறதா கரோனா அலை?

Updated On :15 மார்ச் 2022, 9:13 am


பெய்ஜிங்: சீனாவில் செவ்வாயன்று, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை, அதற்கு முந்தைய நாளை விடவும் இரண்டு மடங்கு கூடுதலாக பதிவாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், செவ்வாயன்று, புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,507 ஆக உள்ளது. இதுவே நேற்று 1.337 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தீவிர நடவடிக்கைகளுக்கும் சவால் விடுக்கும் வகையில் மிக வேகமாக பரவும் ஸ்டீல்ஸ் ஒமிக்ரான் வகை கரோனா தற்போது சீனாவில் பரவி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவில் கரோனா தொற்று பரவிய பிறகு, அங்கு அதன் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.

இதில் பெரும்பாலான பாதிப்பு சீனாவின் வடகிழக்கு நகரமான ஜிலின் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இங்கு மட்டும் 2,601 புதிய கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், ஷென்ஷென் உள்ளிட்ட பல நகரங்களில்  கரோனா பரவல் சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.