பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தரப்பிலிருந்து 3.3 டன்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அளிக்கப்பட்ட மற்றொரு உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இலங்கை சென்றிருந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கையில் நிலவும் கடுமையான மருத்துவ கருவிகள் மற்றும் மருந்து பொருள்களின் தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கையிடம் இன்று ஆம்புலன்ஸ் ஒன்றும், 3.3 டன் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் உயிர்காக்கும் மருத்துவ சேவை தடையில்லாமல் நடைபெறும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக கடைகள், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்களில் மக்களின் கூட்டம் நீண்ட வரிசைகளில் காணப்படுகிறது. இதனால், அந்நாட்டின் அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. இதில், மகிந்த ராஜபட்ச பதவி விலகியதால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றாா். இலங்கையின் சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்க உலக நாடுகளிடம் அவா் கடனுதவி கோரி வருகிறாா்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த நீண்ட கால திட்டங்களை வகுத்தால்தான் கடனுதவி கிடைக்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உலக வங்கியின் மேலாளா் சியோ கண்டா கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சா் ஜி.எல்.பெரீஸை சந்தித்தாா். அப்போது, அவா் உலக வங்கியிடம் நீண்ட நாள் கடனுதவி திட்டத்தை கோரியிருந்தாா்.
இதையடுத்து, இலங்கைக்கு உலக வங்கி 700 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.5,430 கோடி) வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


