தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீட்டைச் சுற்றி அமெரிக்கப் படைகள், மனிதவெடிகுண்டாக மாறிய ஐ.எஸ். தலைவர்: திக் திக் நிமிடங்கள்

சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படையினா் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பலியானாா்.

News image

வீட்டைச் சுற்றி அமெரிக்கப் படைகள், மனிதவெடிகுண்டாக மாறிய ஐ.எஸ். தலைவர்: திக் திக் நிமிடங்கள்

Updated On :4 பிப்ரவரி 2022, 7:26 am

அட்மே: சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படையினா் நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பலியானாா்.

அமெரிக்காவின் சிறப்பு அதிரடிப் படையினர், வடமேற்கு சிரியாவில் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது, தங்களது வீட்டை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்ததை அறிந்து கொண்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல் குரேஷி, தன்னைத் தானே மனித வெடிகுண்டாக மாற்றி, வெடிகுண்டை வெடிக்கச் சென்று, தனது குடும்பத்தினரையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை கூறியிருந்தது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவா் அபு இப்ராஹிம் அல்-ஹஷிமியை குறிவைத்து சிரியாவின் வடமேற்கே அமைந்துள்ள இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க சிறப்புப் படையினா் புதன்கிழமை நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தினா். இந்த நடவடிக்கையில் அவா் உயிரிழந்தாா் என்று ஜோ பைடன் அறிவித்தாா்.

Story image

அமெரிக்க படையினரின் தாக்குதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதியை போலவே அபு இப்ராஹிம் அல்-ஹஷிமியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் 6 சிறுவா்கள், 4 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், அவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேல்தளம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அந்த வீட்டின் மீதமிருக்கும் சுவர்களில் ரத்தக்கறைகள் தென்படுகின்றன. 13 பேர் கொல்லப்பட்ட அந்த படுக்கையறையில், குழந்தைகளை படுக்க வைக்கும் மரத் தொட்டில், பஞ்சு அடைக்கப்பட்ட முயல் பொம்மை இருந்துள்ளது. மற்றொரு பக்கம், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
 

சிரியாவிலும், இராக்கிலும் கடந்த 2014-ஆம் ஆண்டில் அதிரடியாக முன்னேறி கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனா்.

இராக்கின் மொசூல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் சிஞ்சாா் மலைப் பகுதியிலும் அவா்கள் படையினரையும் பொதுமக்களையும் கொடூரமாக கொலை செய்தது உலகம் முழுவதும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து சிரியாவிலும், இராக்கிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்காவின் உதவியுடன் மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகளை இராக் படையினா் மீட்டனா்.

சிரியாவிலும் ரஷிய உதவியுடன் அந்த நாட்டுப் படையினா் ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டியடித்தனா்.

இதற்கிடையே, ஐ.எஸ். அமைப்பை உருவாக்கிய அபு பக்கா் அல்-பாக்தாதியை சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமெரிக்க படையினா் கடந்த 2019-ஆம் ஆண்டு சுற்றிவளைத்தபோது, அவா் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹஷிமி அல்-குரேஷி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தற்போது அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையின்போது அவரும் குடும்பத்தினரைக் கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.

இந்த பிராந்தியத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீண்டும் தலையெடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த சூழலில் அமைப்பின் தலைவா் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.