தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாங்கள் வெல்வோம், இல்லையேல் உலகம் அழியும்: மக்களை கலக்கத்தில் ஆழ்த்தும் டுகின் பேச்சு

ஒன்று போரில் ரஷியா செல்லும், அல்லது உலகம் அழிந்துவிடும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் மூளையாக செயல்படுபவர் என்று கூறப்படும் அலெக்சாண்டர் டுகின் கூறியுள்ளார்.

News image

நாங்கள் வெல்வோம், இல்லையேல் உலகம் அழியும்: மக்களை கலக்கத்தில் ஆழ்த்தும் டுகின் பேச்சு

Updated On :16 டிசம்பர் 2022, 12:42 pm


புது தில்லி: ஒன்று போரில் ரஷியா வெல்லும், அல்லது உலகம் அழிந்துவிடும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதினின் மூளையாக செயல்படுபவர் என்று கூறப்படும் அலெக்சாண்டர் டுகின் கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அலெக்சாண்டர் டுகின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. முதலில், நாங்கள் வெற்றி பெறும் தருணத்தில் இது முடிவுக்கு வரும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. இரண்டாவது வாய்ப்பு, இந்த சண்டையானது, உலகம் அழியும் போது முடியும். ஒன்று நாங்கள் வெல்வோம் அல்லது உலகம் அழிந்துவிடும் என்று புதினின் குரு, புதினின் மூளை என்று பல்வேறு அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரும், அதிக அறிவாற்றல்மிக்கவர் என்று கருதப்படுபவருமான டுகின் குறிப்பிட்டிருப்பது உலக மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் அவர் பேசுகையில், நான் ஒரு விஷயத்தை மட்டும் மிக உறுதியாகச் சொல்வேன், இந்த முறை எதிரியால் ரஷியாவை வெல்ல முடியாது. வெற்றியைத் தவிர, இந்த போரில் எந்த ஒரு தீர்வையும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. இதையே எங்கள் நாடும், எங்கள் மக்களும் எங்கள் அதிபரும் கருதுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பயங்கரவாதிகள் எனக் கருதப்படுவோரால் டுகினின் மகள் மரணம் அடைந்ததன் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த நேர்காணலை அவர் அளித்துள்ளார்.

மரியா, எனது மகள், அவர் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்படாவிட்டால், 30 வயதை எட்டியிருந்திருப்பார் என்று வருத்தத்தோடு கூறினார் டுகின்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.