தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சீனாவில் கடும் வெப்பம்: ஆரஞ்சு எச்சரிக்கை

சீனாவில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் தகித்து வருவதால், அதிக வெப்பநிலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம். 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 10:51 am

சீனாவில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் தகித்து வருவதால், அதிக வெப்பநிலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம். 

இதுதொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், 

கடந்த சில நாள்களுக்கு முன்பு உச்சபட்ச வெப்பநிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதிக வெப்பநிலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சிச்சுவான், சோங்கிங், குய்சோவ், ஹூபே, ஹுனான், ஜியாங்கி, ஜெஜியாங், புஜியான் மற்றும் குவாங்டாங் ஆகிய பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை இருக்கும். 

பகல் நேரத்தில், சிச்சுவான், சோங்கிங், ஹுனான், ஜியாங்சி மற்றும் புஜியன் ஆகிய இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். 

பகல் வேளையில் தொழிலாளர்களும் ஊழியர்களும் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், வெளிப்புறங்களில் நடக்கும் பணிகளைத் தள்ளிவைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் தன்னார்வ மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனத்தில் நான்கு நிறங்களில் எச்சரிக்கை  செய்தி விடுக்கப்படுவது வழக்கம். ஆரஞ்சு, மஞ்சள்,நீலம் மற்றும் சிவப்பு. இதில் உச்சபட்ச எச்சரிக்கையாக சிவப்பு எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது.  இதனால் நீர் நிலைகள் வறண்டுள்ளது. ஜியாங்சு, அன்ஹுய், ஹூபே, ஜெஜியாங், ஜியாங்சி, ஹுனான், குய்சோவ், சோங்கிங், சிச்சுவான் மற்றும் திபெத்தின் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகின்றது. 

இதற்கிடையே வானிலை மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், தேவைப்படும்போது செயற்கை மழையை உருவாக்கவும் கண்காணிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. காட்டுத் தீ அபாயம் குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பநிலை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு வெப்பநிலையின் தீவிரம் குறையும் என்று தேசிய கண்காணிப்பு மையம் கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.