டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சீனாவில் கடும் வெப்பம்: மீண்டும் சிவப்பு எச்சரிக்கை 

சீனாவில் செவ்வாயன்று மீண்டும் கடுமையான வெப்பம் தகிக்கும் என்று கணித்துள்ள, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

News image
சீனாவில் கடும் வெப்பம்: மீண்டும் சிவப்பு எச்சரிக்கை 
Updated On :1 பிப்ரவரி 2024, 10:08 am

ANI

சீனாவில் செவ்வாயன்று மீண்டும் கடுமையான வெப்பம் தகிக்கும் என்று கணித்துள்ள, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

சீனத்தில் கன்சு, ஷான்ஸி, அன்ஹு, ஜியான்சு, ஷாங்காய், ஹுபே உள்ளிட் பல பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும்என்று அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஹுனான், சிச்சுவான், ஷான்ஸி பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேல் வெப்பம் பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகல் வேளையில் தொழிலாளர்களும் ஊழியர்களும் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், வெளிப்புறங்களில் நடக்கும் பணிகளை தள்ளிவைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் தன்னார்வ மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனத்தில் நான்கு நிறங்களில் எச்சரிக்கை  செய்தி விடுக்கப்படுவது வழக்கம். ஆரஞ்சு, மஞ்சள்,நீலம் மற்றும் சிவப்பு. இதில் உச்சபட்ட எச்சரிக்கையாக சிவப்பு எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.

கடும் வறட்சி...
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இனால், நீா் நிலைகள வடு காணப்படுகின்றன. நீா் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீா்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, மின் உற்பத்தி குறைந்துள்ளது.

அதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பயிா்களைப் பாதுகாக்க செயற்கை மழையை உருவாக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.