/

மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: இலங்கை மின்துறை அமைச்சர்

இலங்கையில் விரைவில் மின் கட்டணம் உயரப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அது பற்றி அந்நாட்டு மின்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா விளக்கம் அளித்துள்ளார்.

News image
மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: இலங்கை மின்துறை அமைச்சர்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:05 am

DIN

கொழும்பு: இலங்கையில் விரைவில் மின் கட்டணம் உயரப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அது பற்றி அந்நாட்டு மின்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் இது குறித்து கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவ்வாறு கூறினார்.

இலங்கையில் மின் கட்டணத்தை உயர்த்த இலங்கை பொது விநியோக ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.