டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பதவி விலகுகிறாரா இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச?

கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தினால், தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சபாநாயகரிடம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:01 am

DIN

கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தினால், தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி அங்கு தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது முதலே அங்கு அரசியல் பிரச்னைகளும் இருந்து வருகின்றன. 

இந்நிலையில், கட்சித் தலைவர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டால், தான் பதவி விலகத் தயார் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் கூறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார்.

'இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து ராஜிநாமா செய்ய வலியுறுத்தினால் பதவி விலகத் தயாராக இருப்பதாக அவைத் தலைவர் மஹிந்த அபேவர்தன-விடம் அதிபர் கூறியுள்ளார். 

கட்சித் தலைவர்கள் அனைவரும் அதற்கு தயாராக இருக்கிறோம். எங்களது இந்த கோரிக்கையை அதிபரிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்க அவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கிறேன்' என்று நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். 

மேலும், இலங்கையின் ரம்பக்கனையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்தும் கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 'எங்களுக்கு கங்காரு அரசு தேவையில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும்' என்றும் வலியுறுத்தினார். 

முன்னதாக, நேற்று ரம்பக்கனையில் இலங்கை அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த சம்பவத்தைக் கண்டித்தும் அதிபர் பதவி விலகக்கோரியும் இலங்கையில் ஒரு வாரத்திற்கு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.