ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 

நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

News image

இலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 

Updated On :7 ஏப்ரல் 2022, 8:04 am


வாஷிங்டன்: இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையும் நிலவுவதால், நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கரோனா பெருந்தொற்று மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயமும் இருப்பதாக அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இதுவாகும்.

பல மணி நேர மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் போன்றவற்றை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்து, புதிதாக 4 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ஆனால், நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வந்த கட்சிகள் சில தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததும், காபந்து அரசில் பொறுப்பேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க முக்கிய எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்ட நிலையில், அங்கு பொருளாதார நிலைமையுடன், அரசியல் சூழ்நிலையும் படுமோசமாக மாறிவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.