பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்தக் காரணத்தால் பாகிஸ்தானில் கரோனா 5-வது அலை உருவாகலாம்

பாகிஸ்தானில் கரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்

News image
Updated On :1 நவம்பர் 2021, 10:02 am

இஸ்லாமாபாத்: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால், பாகிஸ்தானில் கரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்

ஓரளவுக்கு பாகிஸ்தான் அரசு கரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. ஆனல், பாகிஸ்தானில் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தாமல்தான் உள்ளனர் என்று பிரதமரின் உடல்நலம் தொடர்பான சிறப்பு உதவியாளர் டாக்டர் ஃபைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், நாட்டில் கரோனா ஐந்தாவது அலை எழக் கூடும்என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுவரை நாட்டில் 26 சதவீத மக்கள் கரோனா தடுப்பூசியை முற்றிலும் செலுத்திக் கொண்டுள்ளனர். 20 சதவீதம் பேர் முதல் தவணையை மட்டும் செலுத்தியுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.