பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப். 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு...

News image

கருப்பு போஸ்டர் - X | RJ Balaji

Updated On :24 ஏப்ரல் 2026, 3:54 pm

நடிகர் சூர்யா நாயகனாக நடித்த “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப். 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான புதிய படம் “கருப்பு”. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், வரும் மே 14 அன்று கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கருப்பு படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஏப். 27 ஆம் தேதி மதுரையில் உள்ள சோலைமலை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என படக்குழுவினர் வெள்ளிக்கிழமை (ஏப். 24) மாலை அறிவித்துள்ளனர்.

முன்னதாக, இப்படம் கருப்புசாமியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் மதுரையில் இசைவெளியீட்டு விழா நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Summary

Surya's Karuppu audio launch ceremony for the film will take place on April 27th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.