/

எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 32 பேர் பலி

எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

எகிப்தில் ரயில்கள் மோதி விபத்து; 32 பேர் பலி

Updated On :26 மார்ச் 2021, 12:38 pm

எகிப்தில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பயணிகள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு எகிப்தில் நேரிட்ட இந்த பயங்கர விபத்தில் 66 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

தெற்கு எகிப்தின் சோஹாக் மாகாணத்தில் தஹ்தா மாவட்டத்தில், தலைநகர் கெய்ரோவிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேரிட்ட ரயில் விபத்தில் 13 பேர் பலியாகினர். அப்போதே எகிப்தில் ரயில்வேயின் உள்கட்டமைப்புகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இன்று மற்றுமொரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.