/

பாகிஸ்தான்: வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 உள்பட 17 பேர் பலி யாகினர்.

News image

பாகிஸ்தான்: வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி

Updated On :8 ஜூன் 2021, 9:07 am

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 உள்பட 17 பேர் பலி யாகினர்.

சுற்றுலா செல்ல சிலாஸிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர் வந்த வேன் ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேன், பனிபா என்ற இடத்தில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது. ஒரு குடும்பத்தினர் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வந்ததுள்ளனர்.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 16 பேர் அந்த வேனில் வந்த போது இந்த விபத்து நேரிட்டு, 16 பேர் மற்றும் ஓட்டுநர் உள்பட 17 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், ஆழம் அதிகமாக இருந்தது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. நீச்சல் தெரிந்த மீட்புப் பணி வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.