/

இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

News image

இலங்கையில் வெள்ளம், நிலச்சரவில் சிக்கி 4 பேர் பலி; 7 பேர் மாயம்

Updated On :5 ஜூன் 2021, 9:55 am


கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.