அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

உயிரோடு வனவிலங்குகள் விற்பனையை தடை செய்க: உலக சுகாதார நிறுவனம்

வனப்பகுதிகளில் பிடிபடும் விலங்குகளை, அப்படியே உயிரோடு சந்தைகளில் விற்பனை செய்யும் முறைக்கு உலக நாடுகள் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

News image

உயிரோடு வனவிலங்குகள் விற்பனையை தடை செய்க: உலக சுகாதார நிறுவனம்

Updated On :13 ஏப்ரல் 2021, 9:19 am


ஜெனீவா: வனப்பகுதிகளில் பிடிபடும் விலங்குகளை, அப்படியே உயிரோடு சந்தைகளில் விற்பனை செய்யும் முறைக்கு உலக நாடுகள் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

வன விலங்குகளிடமிருந்து கரோனா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்கள் பரவும் அபாயம் அதிகமிருப்பதால், இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று போன்ற வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பான விலங்ககள் மற்றும் வன விலங்குகள் தொடர்பான குறிப்பில், வன விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பெரும்பாலான அதாவது 70 சதவீத வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.

ஒரு கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கு அந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவும், அதனை தங்களது வாழ்விடங்களுக்குக் கொண்டு செல்வது மேலும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சந்தைப் பகுதிகள் அதிக உணவுப் பொருள் விற்பனையாகும் பகுதிகளாக உள்ளன. இதுபோன்ற சந்தைகளில், வன விலங்குகளை உயிரோடு விற்பனை செய்யும் நடவடிக்கைக்குத் தடை விதிப்பது விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.