ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அமெரிக்காவில் ஒரேநாளில் 60 ஆயிரம் பேருக்கு கரோனா

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 82,72,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image

US reports over 60k new Covid-19 cases

Updated On :21 அக்டோபர் 2020, 9:30 am

அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 82,72,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்பு 2,20,992 ஆக அதிகரித்துள்ளது. 

ஒற்றை நாள் கரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு கோடையில் இருந்ததை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுவரை 55,46,675 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 27,48,586 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்தே அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.