பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சீன நிறுவனங்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு: சீன வெளியுறவுத் துறை

சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

News image

சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

Updated On :30 ஜூன் 2020, 1:50 pm

பெய்ஜிங்: சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று 59 செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, செல்லிடப்பேசி மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு திங்களன்று உத்தரவிட்டுள்ளது. 

தடை செய்யப்பட்டுள்ள அந்த செயலிகளில், பரவலாக பயன்படுத்தப்படக் கூடிய "டிக்டாக்', "ஷேர் இட்', "கேம் ஸ்கேனர்' உள்ளிட்ட செயலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று செயலிகள் தடை விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பெய்ஜிங்கில் தினசரி நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் செவ்வாயன்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சோ லிஜ்ஜன் கூறியதாவது:

இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு விடுத்துள்ள நோட்டீஸ் குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். சூழலின் தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

சீன நிறுவனங்கள் தாங்கள் தொழில் செய்யும் நாடுகளின் உள்ளூர் சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச தொழில் நடைமுறை சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேநேரம் சீன நிறுவனங்களின் தொழில் நடத்தும் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு       

சீனா மற்றும் இந்தியா இடையேயான நடைமுறை ஒத்துழைப்பு என்பது இரு தரப்பிற்கும் பலனளிக்க கூடியதாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.