சமாதான முயற்சிகள்
2018-இல் அமெரிக்காவின் முயற்சியால் கொரியா உச்சிமாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் சந்தித்து "பான்முன்ஜோம்' ஒப்பந்தத்தில் 2018, ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி, கொரிய போர் முடிவின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாற்றுவதற்கு இரு நாடுகளும் செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2018, ஜூன் 12-ஆம் தேதி கிம் ஜோங்-உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அதில், "பான்முன்ஜோம்' ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் கூட்டறிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர். தங்கள் நாட்டு மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கிம் ஜோங்-உன் கோரிக்கை விடுக்க, அணுஆயுதங்களை முற்றிலும் கைவிட்டால் வடகொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக அப்போது டிரம்ப் உறுதி அளித்தார்.