பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மியான்மர் பச்சை நிற மாணிக்கக் கல் சுரங்கத்தில் நிலச்சரிவு: பலி 113 ஆக உயர்வு

மியான்மர் பச்சை நிற மாணிக்கக் கல் சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கிய 113 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது

News image

மியான்மர் மரகதப் பச்சைக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு. கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2020, 4:34 pm


யங்கோன்: மியான்மர் பச்சை நிற மாணிக்கக் கல் சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கிய 113 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மியான்மரின் கச்சின் மாநிலத்தில் ஹபாகந்த் நகர்பகுதியில் அமைந்துள்ளது மரகதப்பச்சைக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று காலை விபத்து நேரிட்டதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

சுரங்கத்தில் சுமார் 304 மீட்டர் உயர மண்பகுதி அப்படியே பெயர்ந்து சுரங்கத்துக்குள் விழுந்ததில், சுரங்கத்துக்குள் பச்சை நிற மாணிக்கக் கற்களை வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இதே பகுதியில் நவம்பர் 2015-ம் ஆண்டு சுரங்கத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 116 தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். உலகிலேயே பச்சை நிற மாணிக்கக் கற்கள் மிகப்பெரிய அளவில் கிடைக்கும் பகுதியாக மியான்மர் உள்ளது. இதில் ஹாபகாந்த் பகுதிதான்  பச்சை நிற மாணிக்கக் கற்கள் வெட்டி எடுக்கும் மிகப்பெரிய சுரங்கத்தைக் கொண்டிருக்கிறது.

மழைக் காரணமாக சுரங்கப் பகுதி முழுவதும் நீர் தேங்கியிருந்த நிலையில், மரகதப்பச்சை கல் சுரங்கத்தில் காலை 8 மணியளவில் மணல் சரிந்து விழுந்தது. ஈரமான நிலப்பரப்பு அதன் எடை கூடியதால் சுரங்கப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 113 தொழிலாளர்கள் பலியானதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.