திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதைக் கட்டுப்படுத்தும் அமெரிக்கா

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

News image
Updated On :23 ஜனவரி 2020, 10:03 am


வாஷிங்டன்: கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

டிரம்ப் தலைமயிலான அமெரிக்க நிர்வாகம், வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது.

அதன் ஒருபடியாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வந்து, குழந்தை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும் என்பதால், ஏராளமான கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

எனவே, அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விகளும் இனி இடம்பெறும்.

அமெரிக்கக் குடியுரிமை பெற ஏராளமான ரஷ்யர்களும், சீனர்களும் அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அமெரிக்கக் குடியுரிமை பெறும் வழிமுறையை உடைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.