மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91)  உடல்நலக்குறைவின் காரணமாக கெய்ரோவில் செவ்வாயன்று மரணமடைந்தார்.

News image

ஹோஸ்னி முபாரக்

Updated On :25 பிப்ரவரி 2020, 12:57 pm

கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (91)  உடல்நலக்குறைவின் காரணமாக கெய்ரோவில் செவ்வாயன்று மரணமடைந்தார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு துவங்கி முப்பது ஆண்டுகளாக எகிப்து அதிபராக பதவி வகித்து வந்தவர் ஹோஸ்னி முபாரக். ஆனால் 2011-ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியின் மூலமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.        

அவரது அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார்.    

சமீபமாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவர் கெய்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் செவ்வாயன்று மரணமடைந்தார் என்று பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.