மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

'உலகில் 2022 வரை 5ல் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்'

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு 2022-ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News image
'உலகில் 2022 வரை 5ல் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்'
Updated On :27 ஜனவரி 2024, 6:08 pm

ENS


பாரீஸ்: உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு 2022-ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உற்பத்தியாகும் கரோனா தடுப்பூசியில் பாதிக்கும் மேல் வளர்ந்த நாடுகளே முன்பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

உலகளவில் கரோனாவுக்கு 16 லட்சம் பேர் பலியாகியிருக்கும் நிலையில், இந்த பேரிடரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தடுப்பூசி செயல்படும் என்று நம்பப்படுகிறது. 

தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பல வளர்ந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. உலகளவில் வெறும் 14 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகள், அடுத்த ஆண்டில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துகளை தாங்களே கொள்முதல் செய்ய முன்பதிவு செய்துள்ளன என்று அமெரிக்காவில் கரோனா தொடர்பாள புள்ளி விவரங்களை வெளியிட்டு வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதனால், ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமலே போக வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை, கரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் திறன்கொண்ட, பாதுகாப்பான, உலகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது உற்பத்தியை அதிகரித்தாலும் கூட, 2022-ஆம் ஆண்டு வரையில் உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.