மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஈரான் -  ஆப்கன் இடையே முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்

வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரான், ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை இன்று தொடங்கி வைத்தனர்.

News image

ஈரான் -  ஆப்கானிஸ்தான் இடையே முதல் ரயில் போக்குவரத்து தொடக்கம்

Updated On :10 டிசம்பர் 2020, 10:48 am

கிழக்கு ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த ரயில் பாதை, போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும், அண்டை நாடான ஈரானுக்கும் இடையேயான வணிகத்தை மேம்படுத்த உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை தொடங்கப்பட்டிருப்பது, தங்களது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் தனது நிதிச் செலவில் 2007-ஆம் ஆண்டு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை தொடங்கி, தற்போது நிறைவு செய்துள்ளது.

ஈரான் அளித்த மிக மதிப்புவாய்ந்த பரிசாக இது அமையும் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.