சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

'முகப் பாதுகாப்புக் கவசம் மட்டும் போதுமானதில்லை'

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியாமல், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிவது பலனளிக்காது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

News image

'முகப் பாதுகாப்புக் கவசம் மட்டும் போதுமானதில்லை'

Updated On :9 டிசம்பர் 2020, 7:33 am


டோக்யோ: கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியாமல், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிவது பலனளிக்காது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் மிக முக்கிய ஆயுதமாக விளங்குவது முகக்கவசம்தான். அதற்கடுத்த இடத்தில் சமூக இடைவெளியும், கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டுக் கழுவுவதும் அமைந்துள்ளன.

ஆனால், தற்போது, பொது இடங்களுக்குச் செல்லும் பலரும், முகப் பாதுகாப்புக் கவசத்தை (பேஸ் ஷீல்டு) அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், அது கரோனா தொற்றிலிருந்து காக்கும் கருவிதான் என்றாலும், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் மட்டுமே போதுமானதல்ல என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஃபுகோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் முகப் பாதுகாப்புக் கவசம் அணிந்திருக்கும் போது அருகிலிருப்பவர் இருமினாலோ, தும்மினாலோ அதிலிருந்து வரும் நீர்த்திவளைகள் முகப் பாதுகாப்புக் கவசத்தில் படிந்திருக்கும் என்பதால், அதன் மூலம் கரோனா தொற்று அதனை அணிந்திருப்பவர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். 

முகப் பாதுகாப்புக் கவசத்தின் கீழ்ப் பகுதியை கரோனா தொற்று அடைந்துவிட்டால், அதனை அணிந்திருப்பவரை சுவாசிப்பதன் மூலம் கரோன தொற்று அடைந்துவிடும், இவ்வாறு முகப் பாதுகாப்புக் கவசத்தில் விழும் நீர்த்திவளைகள் 0.5 வினாடி முதல் 1 வினாடிக்குள் அதனை அணிந்திருப்பவரை அடைந்துவிடும் வாய்ப்பும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, ஒருவர் முகக்கவசம் அணியாமல் வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிந்திருப்பது, கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ள உதவாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.