காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

வட கொரியாவில் சூறாவளி தாக்கியப் பகுதிகளை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்

வட கொரியாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாங்கே மாகாணப் பகுதிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் நேரில் பார்வையிட்டு சேத நிலவரங்களை ஆய்வு செய்தார்.

News image
வட கொரியாவில் சூறாவளி தாக்கியப் பகுதிகளை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

IANS


வட கொரியாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாங்கே மாகாணப் பகுதிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் நேரில் பார்வையிட்டு சேத நிலவரங்களை ஆய்வு செய்தார்.

சூறாவளி கடந்துச் சென்ற சில மணி நேரங்களில் அரசு ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எனினும், அதிபர் கிம் எப்போது ஆய்வு மேற்கொண்டார்  என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது, சூறாவளியால் ஏற்பட்டிருக்கும் சேதம், அச்சப்பட்டதைப்போல மோசமானதாக இல்லை என்றும், சேதத்தைக் கட்டுப்படுத்த தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்ததாகவும் ப்யாங்யாங்கின் அதிகாரப்பூர்வ கொரியன் மத்திய செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வடகொரியாவில் தானிய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது வாங்கே மாகாணமாகும். எனவே, இங்கு விவசாயப் பகுதிகளில் சேதத்தைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் கிங் ஜாங்-உன் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.