நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி தப்பியோடியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பிரதமர் ஜேசிண்டா ஆர்டென் கூறுகையில், இன்று நியூசிலாந்து வரலாற்றின் கருப்பு தினம் என்று விவரித்துள்ளார்.
கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருந்த மசூதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம், மிகக் கொடூரமான, நியாயப்படுத்த முடியாத வன்முறைச் சம்பவம் என்றும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்திருப்பதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணிவெடி ஒன்றையும் செயலிழக்க வைத்திருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


