ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியாகினர்.

News image
Updated On :15 மார்ச் 2019, 9:40 am


நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி தப்பியோடியிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
 

இது குறித்து பிரதமர் ஜேசிண்டா ஆர்டென் கூறுகையில், இன்று நியூசிலாந்து வரலாற்றின் கருப்பு தினம் என்று விவரித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருந்த மசூதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம், மிகக் கொடூரமான, நியாயப்படுத்த முடியாத வன்முறைச் சம்பவம் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்திருப்பதாக நியூசிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணிவெடி ஒன்றையும் செயலிழக்க வைத்திருப்பதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.