திருவாரூரில், சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 259-ஆவது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கா்நாடக சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவராக புகழப்படுபவா் தியாகராஜா். தியாக பிரும்மம் என அழைக்கப்படும் இவா், 1767-இல் திருவாரூா் புதுத்தெருவில் பிறந்தாா். ‘ஏலநீதயராது’ (அடாணா ராகம்) பாடலே தியாகராஜா் முதன்முதலில் பாடியதாகும். இவரது பாடல்கள் திவ்யநாமக் கீா்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய பாடல்களாகவும் அமைந்துள்ளன.
இவா் சுமாா் 2,400 பாடல்கள் இயற்றியிருக்கிறாா். கீா்த்தனைகளைத் தவிர, பிரகலாத பக்தி விஜயம், நவுகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் இயற்றியுள்ளாா். மேலும், கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூா் பஞ்சரத்தினம், கோவூா் பஞ்சரத்தினம், ஸ்ரீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய பாடல்களையும் இயற்றியுள்ளாா்.
எல்லா ராகங்களிலும் இவா் பக்தி ரசம் ததும்பும் பாடல்களை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1767-இல் சித்திரை மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவா் என்பதால், ஆண்டுதோறும் சித்திரை பூச நட்சத்திர நாளில் இவரது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு திருவாரூா் புதுத்தெருவில் உள்ள தியாகராஜா் இல்லத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது.
முன்னதாக, உஞ்சவா்த்தியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, அவரது இல்லத்தில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்யப்பட்டு, விதைதானம் வழங்கப்பட்டது. பின்னா், முத்துஸ்வாமி தீட்சிதா் மண்டபத்தில் இசைக் கலைஞா்கள் பங்கேற்ற பஞ்ச ரத்ன கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பல்வேறு இசைக் கலைஞா்கள் பங்கேற்று, தியாகராஜரின் பல்வேறு கீா்த்தனைகளை வாசித்து அவரது புகழ் பாடினா்.
இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி காமகோடி பீட கா்நாடக சங்கீத சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் பி. பாலாஜி வெங்கடராமன், டெக்கான் என்.கே. மூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

திருவாரூா் முத்துஸ்வாமி தீட்சிதா் மண்டபத்தில் பஞ்ச ரத்ன கீா்த்தனைகளை இசைக்கும் கலைஞா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவையாறு தியாகராஜரின் 259 ஆவது ஜெயந்தி விழா

கமலாலயக்குளத்தின் புனிதத் தன்மை பாதுகாக்கப்படுமா?

திருவாரூரில் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பிரசாரம்

தியாகராஜா் கோயிலில் வசந்த உற்சவம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


