ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்தியா மீது ஒரே ஒரு அணுகுண்டை வீசினால்.. பர்வேஷ் முஷாரப்ஃபின் திடுக்கிடும் பேச்சு

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 7:29 am


அபு தாபி: இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பதிலளித்துள்ளார்.

அணு ஆயுத பலம் கொண்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு தற்போது அபாய கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் ஒரு அணு ஆயுதத்தை இந்தியா மீது வீசினால், அடுத்த நொடியே, இந்தியா 20 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் மீது வீசி நாட்டையே காலி செய்து விடும் என்று பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.

அபு தாபியில் செய்தியாளர்களிடம் பேசிய முஷாரஃப், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மீண்டும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இங்கே ஒருகாலும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறாது. ஒரு வேளை பாகிஸ்தான் ஒரே ஒரு அணு ஆயுதத்தை இந்தியா மீது வீசினால் கூட, அடுத்த நொடியே, 20 அணு ஆயுதங்களை வீசி இந்தியா பாகிஸ்தானையே காலி செய்து விடும். எனவே, அணு ஆயுதத்தை எடுப்பதாக இருந்தால் 50 அணு ஆயுதங்களை வீசி இந்தியாவை முற்றிலும் அழித்துவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தான் மீது 20 அணு ஆயுதங்களை வீச மாட்டார்கள். எனவே, ஒரே நேரத்தில் 50 அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதா? என்று பர்வேஸ் முஷாரஃப் கேள்வி எழுப்பினார்.

புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.