ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அமெரிக்காவில் கடுங்குளிர்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்க காரணம் இதுதான்! பாருங்கள்!!

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிகளில் வரலாறு காணா கடுங்குளிர் வாட்டி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் கடுங்குளிரில் தவித்து வருகிறார்கள்.

News image
Updated On :1 பிப்ரவரி 2019, 7:57 am


அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதிகளில் வரலாறு காணா கடுங்குளிர் வாட்டி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பேர் கடுங்குளிரில் தவித்து வருகிறார்கள்.

பல இடங்களில் மைனஸ் 32 முதல் மைனஸ் 50 டிகிரிக்குக் கீழ் வெப்பநிலை நிலவுகிறது. எரிவாயு குழாய்களும், தண்ணீர் குழாய்களும் உறைந்து போயிருப்பதால் மக்கள் செய்வதறியாது வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் அளவுக்கு குளிர் நிலவுகிறது.

அதிகக் குளிர் வாட்டும் 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அன்டார்ட்டிகா பகுதியை விடவும் அதிக குளிர் நிலவும் பகுதியாக தற்போது அமெரிக்கா மாறியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், மக்கள் கடும் சிரமங்களை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Story image

நயாக்ரா நீர்வீழ்ச்சியே யாரோ அட்டாக் போட்டு நிறுத்தியது போல உறைந்து போய் உள்ளது.

இதுதான் உறைந்து போன நயாக்ரா நீர்வீழ்ச்சியின் க்ளோசப் ஷாட்.

Story image

நயாகரா நீர்வீழ்ச்சியின் மாறுபட்ட தோற்றம்.

Story image

பழைய இரும்புச் சாமான்கள் என்று நினைக்க வேண்டாம். பனிப்பொழிவால் விபத்துக்குள்ளாகி நின்றிருக்கும் வாகனங்களையும் விட்டுவைக்காத உறைபனி.

Story image

நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது என்னவென்று நிச்சயம் புரிந்திருக்கும். இது நியூ யார்க்கில் உள்ள பிரயன்ட் பார்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் வாட்டர் ஃபௌன்டெயின்.

Story image

உறைந்து போயிருக்கும் படகினை கரையில் நிறுத்தி வைக்க முயற்சிக்கும் ஊழியர்கள்.

Story image

கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இப்படித்தான் இருக்கிறது கடுங்குளிர் நிலைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.