பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

200 ஆண்டுகளில் முதல் முறை: நாட்டர்டாம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை இல்லை

மிகப் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 200 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2019, 7:48 am


பாரீஸ்: மிகப் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 200 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள, 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தீ விபத்து காரணமாக, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1803ம் ஆண்டுக்குப் பிறகு, பழைமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் இந்த ஆண்டுதான் முதல் முறையாக கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் நகரில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நாட்டர்டாம் தேவாலயத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயத்தில் திடீரென தீப்பிடித்தது.

இந்த விபத்தில், 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் மளமளவென தீ பரவியது. இந்த விபத்தில் தேவாலயத்தின் பெரும்பாலான கூரைப் பகுதியும், புகழ்பெற்ற அதன் கூம்பு வடிவ கோபுரமும் சேதமடைந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.