தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு: பாகிஸ்தான் ராணுவம் பிதற்றல்

இருநாட்டுக்கு இடையிலான துப்பாக்கிச்சூட்டில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:50 am

DIN

இருநாட்டுக்கு இடையிலான துப்பாக்கிச்சூட்டில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப் பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்கும் சம்பவம் தீவிரமடைந்துள்ளதாகவும், மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவி வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டின் 73-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட தருணத்தில், இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள உரி மற்றும் ரஜௌரி ஆகிய இடங்களில் பாக். ராணுவம் அத்துமீறி நுழைந்து வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதில் பாக். ராணுவத்தினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மூலம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை அடிப்படை ஆதாரமற்ற போலீயான தகவல் என இந்திய ராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2003-ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறும் பாகிஸ்தானை மத்திய அரசு எச்சரித்துள்ளது. 

முன்னதாக, ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்களை இந்திய ராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு சுட்டு வீழ்த்தினர். இதில் பாக். கமாண்டோவைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Story image

வெள்ளைக் கொடியுடன் வந்து தங்கள் நாட்டின் கமாண்டோ படை வீரர்களின் உடல்களை மீட்டுச் செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.