இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் நிழ்ந்த குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், காலை 8:45 மணியளவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதையடுத்து, இலங்கை தலைநகர் கொழுப்புவில் மதியம் 3 மணியளவில் மேலும் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடித்தது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158-ஆக அதிகரித்தது. இதில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரியவந்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இலங்கை முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அதிகளவில் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியைப் போல பணக்காரா்களுக்கே மம்தா உதவுகிறாா்: ராகுல்

உ.பி.: கங்கை விரைவுச் சாலையை ஏப். 29-இல் திறந்துவைக்கிறாா் பிரதமா்

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


