ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

போர் பதற்ற எதிரொலி: ஈரான் செல்லும் இம்ரான் கான்

போர் பதற்ற எதிரொலியை அடுத்த சில மாதங்களில் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈரான் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 3:24 pm

போர் பதற்ற எதிரொலியை அடுத்த சில மாதங்களில் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈரான் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைஸல் கூறுகையில், ஈரான் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்கிறார். பயண விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். 

பிப்ரவரி 13-ஆம் தேதி ஈரானில் நடைபெற்ற ஜெய்ஷ்-அல்-அதல் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 27 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இஸ்லாமாபாத் தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியது.  

மேலும் கடந்த சில வருடங்களாக ஈரானில் ஜெய்ஷ்-அல்-அதல் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின், ஈராக் நாட்டுக்கு முதன்முறையாக செல்கிறார்.

ஜெய்ஷ் அல்-அதல் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.