சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழா: மோடிக்கு அழைப்பு விடுத்த இப்ராஹிம் முகமது சோலீ

மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார். நவம்பரில் நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:55 pm

IANS

மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார். நவம்பரில் நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சோலீயும் தொலைபேசியில் உரையாடிய போது, அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு மோடிக்கு சோலீ அழைப்பு விடுத்ததாகக்  அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே முன்னாள் அதிபர் முகமது ரஷீத் வெற்றி பெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது. அதனால் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல்லா யாமீன், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் முகமது ரஷீத் போட்டியிடுவதாக இருந்தது. எனினும், யாமீன் அரசு பதிவு செய்துள்ள பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பி, தற்போது இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரஷீத், போட்டியிலிருந்து விலகினார்.

அதையடுத்து, அவருக்கு பதிலாக இப்ராஹிம் முகமது சோலீ தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட முடிவுகளின்படி, 58.3 சதவீத வாக்குகளைப் பெற்று முகமது சோலீ வெற்றி பெற்றார். அதிபர் யாமீனுக்கு 41.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து, 7-ஆவது அதிபராக முகமது சோலீ வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.