குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கொரிய அதிபர்கள் இன்று மீண்டும் சந்திப்பு

வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சனிக்கிழமை மீண்டும் திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:08 pm

Raghavendran

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் சனிக்கிழமை திடீரென சந்தித்து சுமார் 2 மணி நேரங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இரு நாடுகளின் தலைவர்களும் எல்லையோரம் அமைந்துள்ள தென் கொரிய பகுதியில் சந்தித்துப் பேசினர். வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையில் பேசுவது இதுவே முதன்முறையாகும். 

அமெரிக்கா மற்றும் வட கொரிய இடையேயான சந்திப்பு வெற்றிகரமாக அமைவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பின் முழுக் காரணம் மற்றும் சந்திப்பின் போது நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான விவரங்களை தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதிக்குள் இரு நாடுகளின் தலைவர்களும் சந்திக்க வாய்ப்புள்ளதாக டொனால்டு டிரம்ப் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.