வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இனி அனைவரும் நிம்மதியாக உறங்கலாம்: அமெரிக்கா திரும்பிய டிரம்ப் ட்வீட்

மிகப்பெரிய பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது தான் நாடு திரும்பியுள்ளேன். அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:36 pm

Raghavendran

கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் சென்ஸாட்டா தீவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் டிரம்ப்பும், கிம் ஜோங்கும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இரு நாடுகளையும் சேர்ந்த அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தையில், தனது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியாவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டன.

இந்நிலையில், நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ட்விட்டரில் புதன்கிழமை பதிவிட்டதாவது:

மிகப்பெரிய பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது தான் நாடு திரும்பியுள்ளேன். நான் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் தற்போது அனைவரும் பாதுகாப்பாக உணரும் தருணம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவிடம் இருந்து இனிவரும் காலங்களில் எந்தவித அணுஆயுத அச்சுறுத்தலும் இருக்காது. 

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு சுவாரஸ்யமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்துள்ளது. வருங்காலத்தில் வடகொரியாவுக்கென சர்வதேச அளிவல் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த சந்திப்புக்கு முன்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா போருக்கு தயாராவதாக பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். முன்னாள் அதிபர் ஒபாமா கூட வடகொரியா தான் அமெரிக்காவின் முக்கிய மற்றும் மிகப்பெரிய எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். இனிமேல் அதுபோன்ற சூழ்நிலை கிடையாது. அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.