வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆஃப்கானிஸ்தானில் 34 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:35 pm

Raghavendran

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

நாங்கர்ஹார் பகுதியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் பொதுமக்கள் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை.

அதே நாங்கர்ஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 34 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, ஜவஸ்ஜான் பகுதியில் தலிபான் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 7 போலீஸார் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஜூன் 7-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பயங்கரவாத சம்பவங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தலிபான் அமைப்பும் ஜூன் 9-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், தலிபான் அமைப்பு நடத்திய இந்த திடீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஆஃப்கன் அரசு பதிலடி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.