மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

பயனாளர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட பேஸ்புக்: வெளிவரும் அடுத்த பூதம் 

பயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:13 pm

IANS

நியூயார்க்: பயனாளர்களின் தகவல்களை செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக பிரபல நியூயார்க் டைம்ஸ் இதழில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

உலகின் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் திகழ்ந்து வருகிறது. ஆனால் அது அவ்வளவாக பிரபலமாவதற்கு முன்பாகவே, உலகின் ஆப்பிள்  மற்றும் சாம்சங் உள்ளிட்ட 60 முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி பேஸ்புக் செயலியை குறிப்பிட்ட செல்போன் நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் குறித்த அந்தரங்கத் தகவல்களை, பேஸ்புக் நிறுவனமானது குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிந்து கொண்டுள்ளது.

இதன்மூலம் பேஸ்புக் நிறுவனமானது தனது வீச்சினை அதிகப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, பேஸ்புக்கின் சிறப்பு வசதிகளான மெஸெஞ்சர் மற்றும் அட்ரஸ் புக் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தது.

ஆனால் பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் 'மத்திய வணிக ஆணையம்' என்னும் சுதந்திர  அமைப்புடன், பேஸ்புக் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு எதிரானது என்னும் பேச்சு கிளம்பியுள்ளது.       

சில மாதங்களுக்கு முன்னதாக 'கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா' என்னும் தேர்தல் ஆய்வு நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் தகவல்களை பகிந்து கொண்டது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது நினைவிருக்கலாம். அதில் முதலில் பயனாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்களின் தகவல்களும் பகிரப்பட்டது. பின்னர் பேஸ்புக் நிறுவனமானது, பயனாளர்களின் நண்பர்களின் தகவல்களை பகிர்வதை நிறுத்தி விட்டது. ஆனால் செல்போன் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இத்தகைய ஒப்பந்தங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட தன்மையுடையவை என்றும், இதன் மூலம் மிகவும் குறைவான அளவே தவறுகள் நிகழ்ந்தது தங்களுக்குத் தெரியும் என்றும் பேஸ்புக் நிறுவன துணைத் தலைவர்களில் ஒருவரான ஐம் ஆர்ச்சிபோங் தெரிவித்துளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.