இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

17 ஆண்டுகளுக்குப் பின்: 9/11 தாக்குதலில் இறந்தவரை அடையாளம் காட்டிய டிஎன்ஏ தொழில்நுட்பம்

சரியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் 9/11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு டிஎன்ஏ தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2018, 9:17 am

சரியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் 9/11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்த இளைஞரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு டிஎன்ஏ தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்  நாள், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களை தலிபான் பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து தாக்கினர்.  இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான 2,753 பேரில், 1,642வது நபராக பட்டியலிடப்பட்டவர் ஸ்காட் மைக்கேல் ஜான்சன். 26 வயது நிதித் துறை ஊழியரான ஜான்சனின் டிஎன்ஏவை சோதித்து, சரியான தகவல் தற்போது கிடைத்துள்ளது.

நிதித் துறை ஊழியராக பணியாற்றிய ஜான்சன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியானவர்களின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் டிஎன்ஏ சோதனையின் மூலம் அடையாளம் காணப்பட்ட முதல் நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 1,100 பேர் அடையாளம் காணப்படாமலேயே உள்ளனர். இந்த டிஎன்ஏ சோதனை 89% அளவுக்கு துல்லியமான தகவலைத் தருவதால் விரைவில் இவர்களது அடையாளங்களும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.