பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இம்ரான் கான் வாக்கினை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிசீலனை

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் வாக்கினை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :25 ஜூலை 2018, 1:16 pm

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் வாக்கினை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது  முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.  

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் அவர்களது வாக்குகளை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் இம்ரான் கான், தான் வாக்களிக்கும் போது அதை ஊடகங்கள் பதிவு செய்யும் விதமான வகையில் செயல்பட்டுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் வாக்களித்து விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.