2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பதிமூன்று குழந்தைகளை வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி சித்ரவதை: கொடூர பெற்றோர் கைது! 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:59 am

IANS

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகளை, வீட்டுக்குள் சங்கிலியால் கட்டி அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்த பெற்றோர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணத்தின் ரிவர்சைட் காவல்துறை தெரிவித்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதி பெரிஸ். இங்கு வசித்து வந்தவர்கள் டேவிட் ஆலன் டர்பின் மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் தம்பதியினர். இவரகளது வீட்டில்தான் அந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த ஞாயிறன்று அங்கு இருந்து தப்பி வந்த 10 வயது சிறுமியொருத்தி அங்கு தனக்கு கிடைத்த அலைபேசி ஒன்றின் மூலமாக, ரிவர்சைட் காவல்துறைக்கு, வீட்டில் தனது சகோதர சகோதரிகளான மேலும் 12 பேர் சிறைபட்டிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். இதனால் உஷாரான காவல்துறையினர், உடனடியாக அந்த வீட்டிற்கு சோதனைக்குச் சென்றுள்ளனர்.  

அங்கு அவர்கள் கண்ட காட்சியானது அவர்களை அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது. 2 வயது முதல் 29 வயது வரை உள்ள 13 குழந்தைகள் அந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அதில் சிலர் தங்களது படுக்கைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, பூட்டு போடப்பட்டிருந்துள்ளனர். மேலும் அவர்களில் சிலர் 18 முதல் 29 வயது வரையுள்ள பெரியவர்கள் ஆவார்கள். அவர்கள் இருந்த இடமானது சுகாதாரக் குறைவாக இருந்ததுடன், அவர்களும் போதிய உணவு அளிக்கப்படாமல் மெலிந்து, அழுக்கான ஆடைகளுடன் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஏன் அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான சரியான காரணங்களைக் கூற இயலாததால் டேவிட் ஆலன் டர்பின் மற்றும் லூயிஸ் அன்னா டர்பின் தம்பதியினர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குழந்தைகளை சித்ரவதை செய்தல் மற்றும் ஆபத்து உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகளை அனைவரும் தற்பொழுது மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.