2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது: பிரபல பாடகியின் தந்தை பேட்டி! 

எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று பிரபல ஆங்கிலப் பாடகி ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:52 am

IANS

லண்டன்: எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று பிரபல ஆங்கிலப் பாடகி ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தினைச் சேர்ந்த பிரபலப் பாடகி ஏமி வைன்ஹவுஸ். பாடல் பாடுவதுடன் தானே பாடல்களை இயற்றுபவராகவும் அவர் திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளவுக்கு  அதிகமாக மது அருந்தியதனால் அவர் மரணமடைந்தார்.

மறைந்த பாடகி ஏமி வைன்ஹவுஸ் தனது தந்தை மிட்ச் மீது மிகுந்த பாசம் உடையவராக இருந்தார். தற்பொழுது மகள் மறைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், தனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிக்கை இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

அவள் மறைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் என் மனதினில் ஒரு எண்ணம் தோன்றியது. அதன்படி அவள் எதோ ஒரு வடிவத்தில் என்னிடம் மீண்டும் திரும்பி வருவாள் என்று எண்ணினேன். அதன்படியே நடந்தது; ஆனால் ஸ்தூல வடிவமாக அல்ல... அவள் ஆவி வடிவத்தில் என்னிடம் தினமும் வருகிறாள்.

அவள் ஆவி வடிவில் தினமும் நான் உறங்குகையில் எனது கட்டிலுக்கு வந்து, முனையில் அமர்ந்து கொள்கிறாள். அங்கேயே அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதனால் மனம் துணுக்குற்று, 'உனக்கு என்ன ஆகி விட்டது?' என்று நான் வினவுகிறேன். ஆனால் இப்படி ஒரு வடிவத்திலாவது அவள் என்னுடன் இருக்கிறாள் என்பதே எனக்கு மிகவும்  ஆறுதலாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.