தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிறுமி சைனாப்பை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பு

சிறுமி சைனாப் அமினை கொன்றவனுக்கு 4 மரண தண்டனைகள் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

Raghavendran

பாகிஸ்தானில் கடந்த மாதம் 9-ந் தேதி சைனாப் அமின் என்ற 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக ஒரு பெண் பத்திரிகையாளர் தனது பெண் குழந்தையுடன் செய்தி வாசித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது, பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி மாயமான சைனாப் அமீன், நான்கு நாள்கள் கழித்து ஜனவரி 9-ந் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடந்த விசாரணையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த கொலை விவகாரத்தில் தொடர்புடைய இம்ரான் அலி (வயது 24) என்பவரை ஜனவரி 23-ஆம் தேதி கைது செய்து லாகூர் மத்திய சிறையில் அடைத்தது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி காதீர், கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பயங்கரவாத குற்றங்களுக்கு 4 மரண தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாகிஸ்தான் மதிப்பில் 2 மில்லியன் டாலர்கள் அபராதம், அந்த சிறுமியை கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசிய குற்றத்துக்காக 7 வருட கடுங்காவல் தண்டனை உள்ளிட்டவைகளை வழங்கி உத்தரவிட்டார்.  

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சைனாப் அமீன் குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவரான இம்ரான் அலி, அந்தச் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.