கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இத்தாலியில் பாலம் உடைந்து விழுந்து பெரு விபத்து: 37 பேர் பலி 

இத்தாலியில் உள்ள முக்கியமான பாலம் ஒன்று உடைந்து விழுந்த பெரு விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 9:51 am

ரோம்: இத்தாலியில் உள்ள முக்கியமான பாலம் ஒன்று உடைந்து விழுந்த பெரு விபத்தில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்று ஜெனோவா. இங்குள்ள பிரதான சாலையில் 1960-ஆம்  ஆண்டு கட்டப்பட்ட மொராண்டி பாலம் உள்ளது. அருகில் உள்ள சிறு துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டு செல்வதற்கான முக்கிய இணைப்புச்சாலையில்தான் இந்தப் பாலம் அமைந்துள்ளது.

தற்பொழுது அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. உள்ளூர் நேரப்படி செவ்வாய் நண்பகல் சமயத்தில் மொராண்டி பாலத்த்தின் குறிப்பிட்ட 100 மீட்டர் அளவுள்ள பகுதி இடிந்து விழுந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் 30 முதல் 35 கார்களும், மூன்று பெரிய வாகனங்களும் அதன் மீது இருந்துள்ளன. பாலத்தின் உடைந்த பாகங்கள் கீழே உள்ள ரயில் தணடவாளம், ஆறு மற்றும் அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது விழுந்துள்ளன. பின்னர் நாடு முழுவதும் இருந்து சுமார் 250 மீட்பு படை வீரர்கள் வந்து பாலத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

மொராண்டி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று குழநதைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளனர். விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.