கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சிறையில் சக கைதிகளுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் 

பாகிஸ்தானின் 71-ஆவது சுதந்திர தினத்தை சிறையில் அடைபட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சக கைதிகளுடன் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2018, 7:49 am

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 71-ஆவது சுதந்திர தினத்தை சிறையில் அடைபட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சக கைதிகளுடன் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் மற்றும் மரியத்தின் கணவரான முகமது சப்தார் ஆகிய மூவரும், சட்ட விரோதமாக லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ராவல்பிண்டி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் 71-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் செவ்வாயன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில்   பாகிஸ்தான் சுதந்திர தினத்தை சிறையில் அடைபட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சக கைதிகளுடன் கொண்டாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் 'டான்' பத்திரிகையில் வெளியாகி இருக்கும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொன்றும் ஐந்து கிலோ எடையுள்ள மூன்று கேக்குகள் சிறைக்குள் கொண்டு வரப்பட்டன. இதற்கான செலவை ஷெரிப் ஏற்றுக் கொண்டார். கைதிகளின் வேண்டுகோளின்படி ஷெரீப் ஒரு கேக்கினை வெட்டினார். அத்துடன் அவர் கைதிகள் மத்தியிலும் பேசினார். அவரது மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

ஷெரிப் தனது பேச்சின் பொழுது 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதற்கான சூழல்கள் குறித்தும், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அவரது குடும்பத்தினர் அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் குறிப்பிட்ட பொழுது கைதிகள் ஆர்வத்துடன் கேட்டனர்.

அதேபோல சிறையிலடைப்பட்டுள்ள கைதிகளுக்கான உயர் கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவது பற்றியும் அவர் பேசினார்.

அதேபோல பெண் கைதிகளிடம் பேசிய நவாஸின் மகளான மரியம், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சியின் பொழுது நாடு அடைந்த முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.