தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒசாமா பின் லேடன் குறித்த 4,70,000 புதிய கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ!

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எக்கச்சக்கமான தகவல்கள் அடங்கிய 4,70,000 புதிய கோப்புகளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ வெளியிட்டுள

News image
Updated On :2 நவம்பர் 2017, 10:53 am

வாஷிங்க்டன்: சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எக்கச்சக்கமான தகவல்கள் அடங்கிய 4,70,000 புதிய கோப்புகளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த பொழுது, 2011-ஆம் ஆண்டு  மே மாதம், அமெரிக்காவின் 'சீல்' படைப்பிரிவு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.       

அப்பொழுது அவன் வீட்டிலிருந்து  முக்கிய ஆவணங்கள் மற்றும் விடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இத்தனை நாள் சி.ஐ.ஏ வசம் இருந்த இந்த ரகசிய ஆவணங்கள் அனைத்தும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் ஒசாமா பின் லேடனின் மகனின் திருமண வீடியோ மற்றும் ஒசாமா பின் லேடன் எழுதிய டைரிகள் கிடைத்ததாக, அவற்றை முன்னமே பார்வையிட்ட ஆராய்ச்சியாளர்கள் தாமஸ் மற்றும் பில் ஆகியோர் தெரிவித்தனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பின்  திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் கூர்மையாக அறிந்து கொள்ள உதவும் என்று  சி.ஐ.ஏ இயக்குனர் மைக் பொம்பே தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.