மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏர் ஏசியா விமானம் ஒன்று இயந்திரக் கோளாறால் கடுமையான விபத்துக்குட்பட்டு ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணித்த அத்தனை பேரும் மாண்டனர். அந்த விபத்துக்கு மோசமான rudder control system தான் காரணமென அப்போது கூறப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று அதிகாலையில் நடந்த இந்தக் கோளாறுக்கான காரணங்களை விமான தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து வருகிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 90 நிமிடங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத பயணிகள் தற்போது; “நான் மீண்டு விட்டேன்... நம்ப முடியவில்லை’ ரீதியில் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என ஸ்டேட்டஸ் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.