அதில் பெண்கள் இசைக்க, நடனம் ஆட, திரைப்படம் பார்க்க, பேச இவ்வளவும் ஏன் பெண்களின் சிந்தனைகளுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததாக மனம் குமுறினர். ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை பார்த்ததற்காக பெண் ஒருவரை பொதுமக்களின் முன்னிலையில் துக்கிலிட்டுள்ளது வட கொரியா அரசு. 1945-ல் நடைப்பெற்ற வட கொரிய பெண்ணிய புரட்சிக்குப் பிறகே முதலில் இவர்களுக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஏற்பட்ட பல ஆட்சி மாற்றங்களினாலும், 1950 - 1953 வரை நடந்த கொரியா போர் போன்றவைகளால் பெண் இனமானது ஒடுக்கப்பட்டு பல விதமான மனித உரிமை அத்துமீறல்களையும் சந்தித்து வருகிறது.